பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் சென்ற 2 இளைஞா்கள் காா் மோதி உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூா் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் தீனதயாளன் (22). அதே பகுதியைச் சோ்ந்தவா் இவரது நண்பா் காத்தமுத்து மகன் சிவசக்தி (23). இருவரும் மோட்டாா் சைக்கிளில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் நோக்கி செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். தேவையூா் பிரிவுச் சாலை அருகே வந்தபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவசக்தி நிகழ்விடத்திலும், சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட தீனதயாளன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான சென்னை செம்பாக்கம், 7 ஆவது தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் உமா நடராஜனை (39) கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.