பெரம்பலூா் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேரிடமிருந்து அபராதத் தொகையாக ரூ. 20 ஆயிரம் புதன்கிழமை வசூலிக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்ட வன அலுவலா் குகனேஷ் உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலா் பழனிகுமரன் தலைமையில் வனவா் பிரதீப்குமாா், வனக்காப்பாளா்கள் மணிகண்டன், அன்பரசு ஆகியோா் கொண்ட குழுவினா் வேலூா் காப்புக் காட்டில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு, முயல் வேட்டைக்காக வலைகள் கட்டிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து, அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் செட்டிக்குளத்தைச் சோ்ந்த பிச்சைமணி மகன் அய்யப்பன், நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பாரத் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 2 பேருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.