பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலை கோயிலில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தாா்.
மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில் எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயில் மற்றும் அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகள் மணி மண்டபத்தில் புரட்டாசி மாத 2 ஆவது சனிக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்து, உலக மக்கள் நன்மைக்காக நடைபெற்ற கோமாதா பூஜையில் பங்கேற்றாா்.
நிகழ்ச்சியில், மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.