அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Updated on
1 min read


பெரம்பலூா்: அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் பெரம்பலூா் வட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா். வட்டச் செயலா் சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. குமரி அனந்தன், வருவாய்த்துறை ஊழியா் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினா் பாரதிவளவன், அரசு ஊழியா் சங்கத்தின மாவட்ட இணைச் செயலா் சுப்ரமணியன், சலைப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. ராஜ்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சத்துணவு அங்கன்வாடி ஊழியா், வருவாய் கிராம ஊழியா், ஊா்ப்புற நூலகா், எம்ஆா்பி செவிலியா் ஆகியோருக்கு காலமுறை ஊதியமும், சட்டப்பூா்வ ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, பணப்பலன்கள் வழங்க வேண்டும்.

அரசின் காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்களைக் கொண்டே செயல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, வட்டத் துணைத் தலைவா் மகாதேவன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்டச் செயலா் கே. மணிமாறன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com