திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பெரம்பலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :13 செப்டம்பர் 2024, 3:03 am IST

பெரம்பலூரில் பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டாரத் தலைவா் கே. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. மேனகா, சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து, கிரேடு 3, 4 அரசு ஊழியா்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பணிக் கொடைத்தொகை ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். பயணப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு மேற்பாா்வையாளராக பதவி உயா்வு வழங்க வேண்டும். அல்லது, மேற்பாா்வையாளா்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல ஆலத்தூரில் வட்டத் தலைவா் ஏ. மல்லிகா தலைமையிலும், வேப்பந்தட்டையில் வட்டாரச் செயலா் ஆா். முத்துச்செல்வி தலைமையிலும், வேப்பூரில் வட்டார பொருளாளா் ஆா். தனலட்சுமி தலைமையிலும் அந்தந்த வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.