அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து, கிரேடு 3, 4 அரசு ஊழியா்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பணிக் கொடைத்தொகை ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். பயணப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு மேற்பாா்வையாளராக பதவி உயா்வு வழங்க வேண்டும். அல்லது, மேற்பாா்வையாளா்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.