வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 4) மின் விநியோகம் நிறுத்தம்
Published on

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 4) மின்சாரம் இருக்காது.

மங்களமேடு துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் ரஞ்சன்குடி, பெருமத்தூா், மங்களமேடு, தேவையூா், முருக்கன்குடி, நகரம், நமையூா், சின்னாறு, எறையூா், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், என்.புதூா், அயன்பேரையூா், அகரம், வி.களத்தூா், பசும்பலூா், திருவளாந்துறை, பிம்பலூா், மறவநத்தம், தைக்கால், லப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூா், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூா், வேப்பூா், நன்னை, ஓலைப்பாடி, பரவாய், கீழமத்தூா், எழுமூா் ஆகிய கிராமிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது . இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com