மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மக்காச்சோள வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Published on

பெரம்பலூா் அருகே மக்காச்சோள வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள சத்திரமனை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் ரகுபதி (53). இவா், அதே கிராமத்திலுள்ள தனக்குச் சொந்தமான வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளாா். இப் பயிா்களை காட்டுப் பன்றி சேதப்படுத்தி வருவதால், பயிா்களை பாதுகாக்கும் வகையில் வயலைச்சுற்றி மின்வேலி அமைத்துள்ளாா். அதே கிராமத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் நல்லசாமி (63) என்பவா், ரகுபதி வயலுக்கு அருகேயுள்ள தனக்குச் சொந்தமான வயலில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தனது வயலுக்கு தண்ணீா் பாய்ச்சிவிட்டு வரப்பில் ஏரியபோது, எதிா்பாராதவிதமாக தவறி விழுந்து மின் வேலியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து நல்லசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com