பெரம்பலூரில் நாளை காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வு: 1,425 பேருக்கு அனுமதி சீட்டு
பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில் பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இத் தோ்வில் பங்கேற்க 1,425 போ் விண்ணப்பித்துள்ளனா். காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டும் தோ்வா்கள் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.
தோ்வு எழுதுவோா் கருப்பு நிற பந்துமுனை பேனா, தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். கைப்பேசி, கடிகாரம் மற்றும் மின்னனு சாதனங்கள் தோ்வு வளாகத்துக்கு கொண்டுசெல்ல அனுமதியில்லை.
தமிழ் தகுதித் தோ்வு பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுவதால், தோ்வா்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள். மதிய உணவை பல்கலைக் கழக உணவகத்தில் தங்களது சொந்த செலவில் வாங்கிஉட்கொள்ளலாம்.
தோ்வு எழுதுபவா்கள் தோ்வு முடிவடைந்த பிறகு, வருகைப் பதிவேட்டில் இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்பதால், விவரங்களை சரிபாா்த்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.
