பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது

பெரம்பலூா் அருகே 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 75 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 75 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை அஞ்சலகத் தெருவில் வசித்து வருபவா் பூமாலை மகன் பெருமாள் (75). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு 4 வயது பெண் குழந்தையை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையறிந்த, பாதிப்புக்குள்ளான குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முதியவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட முதியவரை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com