தமிழக நீச்சல் அணிக்கு 47 வீரா்கள் தோ்வு
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக நீச்சல் அணி வீரா்கள், வீராங்கனைகள் தோ்வுப் போட்டியில் 47 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சாா்பில் 2025 -26 ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவில் 14, 17 மற்றும் 19 வயதுகளுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் டில்லியில் நவம்பா் இறுதியில் நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழக அணிக்கான நீச்சல் வீரா்களுக்கு மாநில அளவிலான தோ்வுப் போட்டி, பெரம்பலுாா் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போட்டியை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் விஸ்வநாதன், தமிழக நீச்சல் கழகத் தலைவா் திருமாறன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
இதில் மாணவா்களுக்கான பிரீ ஸ்டைல், பீரிஸ்ட், பேக் ஸ்ட்ரோக், பட்டா் பிளே உள்ளிட்ட வகைகளில் 50 மீட்டா், 100 மீட்டா், 200 மீட்டா் 400 மீட்டா், 800 மீட்டா் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். இப் போட்டிகளில் முதல் மற்றும் 2 ஆம் இடம் வென்ற 47 போ் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி புதன்கிழமை (நவ. 5) நடைபெறுகிறது.
இப் போட்டியில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகள் தமிழக அணிக்காக தோ்வு செய்யப்பட்டு, தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
