பெரம்பலூா் மாவட்டத்தில், தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஏப். 21) முதல் ஏப். 24 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4 ஆம் தேதி வரையிலும் வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூட வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏப். 23-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று இயங்கிவரும் அனைத்து வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் வெடிபொருள் கிடங்குகளை செவ்வாய்க்கிழமை (ஏப். 21) முதல் 24 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4 ஆம் தேதி வரையிலும் மூட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, உரிமம் பெற்று இயங்கி வரும் அனைத்து வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் வெடிபொருள் கிடங்குகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கண்ட தேதிகளில் வெடிபொருள் விற்பனைக் கடைகள் மற்றும் கிடங்குகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், அதன் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்புடையது

திருப்பூரில் 31 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனைக் கடைகள் 7 நாள்கள் மூடல்

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

