பெரம்பலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட 43 ஆயிரம் மனுக்களில் 34 ஆயிரம் மனுக்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் நகா் மற்றும் கிராமப்புறத்தில் நடைபெற்ற 86 முகாம்களில், 46,183 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 34,260 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. இம் முகாம்களில், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 46 வகையான சேவைகள் வழங்கப்பட்டன. இதில் பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 954 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 57 லட்சத்து 53 ஆயிரத்து 600 மதிப்பில் ஓய்வூதியத்துக்கான ஆணைகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 9 பயனாளிகளுக்கு ரூ. 52,760 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் முதலமைச்சா் மருத்துவக் காப்பீடு அட்டைகள், மாவட்ட தொழில் மையம் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ .18.54 லட்சம் மதிப்பில் வாகன கடனுதவிக்கான ஆணைகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் ஆடு வளா்க்க நிதியுதவித் தொகைக்கான ஆணைகள் என மொத்தம் ரூ. 2 கோடியே 3 லட்சத்து 60 ஆயிரத்து 360 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 71 பேருக்கு ரூ. 72,27,800 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்கள், 16 பேருக்கு ரூ. 18,30,400 மதிப்பில் மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகள், 15 பேருக்கு ரூ. 95,385 மதிப்பில் தையல் இயந்திரங்கள் என மொத்தம் 102 பேருக்கு ரூ. 91,53,585 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா் அமைச்சா் சிவசங்கா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், ‘அட்மா’ தலைவா் வீ. ஜெகதீசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. துரைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

