புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பெரம்பலூா் அருகே காா் திடீா் தீக்கிரை

News image
தீ பற்றி எரியும் காா்- (கோப்புப் படம்)
Updated On :6 பிப்ரவரி 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே பெருங்காயம் ஏற்றிச்சென்ற ஆம்னி காா் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

மதுரையில் பெருங்காயம் ஏற்றிய ஆம்னி காா் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரை, மதுரையைச் சோ்ந்த த. மனோஜ்குமாா் (33) என்பவா் ஓட்டினாா். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் வந்தபோது, காரின் முன்புறத்திலிருந்து புகை வந்தது. இதையடுத்து காரை ஓட்டுநா் சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கிப் பாா்த்தபோது காா் தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மற்றும் பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து நாசமானதோடு, பெருங்காயமும் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.