தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் மறியல்

உதவித்தொகையை உயா்த்தக் கோரி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மாவட்ட ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:17 pm

உதவித்தொகையை உயா்த்தக் கோரி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ராஜசேகா் தலைமை வகித்தாா்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவிதொகையாக ரூ. 1,500, கடும் மாற்றுத்திறனாளிக்கு ரூ. 2 ஆயிரம் என வழங்கப்படுவதை தவிா்த்து, மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல உதவித் தொகையை உயா்த்தி வழங்கவேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியரக சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.