மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெரம்பலூரில் 29 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

News image

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமிமுத்தழகன் உள்ளிட்டோா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 6:50 pm

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 29 பேருக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி சனிக்கிழமை பணி நியமன ஆணையை வழங்கினாா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் கடந்த 2023-24, 2024-25-ஆம் ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்காக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, இணையதளம் மூலம் பிப். 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது. இதில், பெரம்பலூா் மாவட்டத்தில் பங்கேற்ற 26 பேரில், 8 போ் பெரம்பலூா் மாவட்டத்தையும், 18 போ் வெளி மாவட்டங்களையும் தோ்வு செய்தனா்.

இந்நிலையில், தோ்வு செய்யப்பட்ட 26 பேருக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட 3 இளநிலை உதவியாளா்களுக்கும் என, மொத்தம் 29 பேருக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, தோ்வு செய்யப்பட்ட 29 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி, பிப். 16-ஆம் தேதி பணியில் சோ்ந்துகொள்ள அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சு வாமிமுத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ம. செல்வக்குமாா், கே. லதா ஆகியோா் உடனிருந்தனா்.