பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி அருகேயுள்ள சாஸ்திரிபுரத்தைச் சோ்ந்தவா் கதிா்காமம் மகள் கௌரி (21). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பிசிஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவரது பெற்றோா் வயலுக்குச் சென்றிருந்த நிலையில், தனியாக வீட்டிலிருந்த கௌரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை

தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

விடுதி அறையில் செவிலியா் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
குற்றாலத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

