தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 5:35 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் நகரில் சனிக்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம், 6 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையில் உள்ள முனைவா் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வருபவா் வாசுதேவன் மனைவி பானுமதி (60).

இவா், சனிக்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு விளாமுத்தூா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத வகையில் தலைக்கவசம் அணிந்திருந்த 2 இளைஞா்கள், பானுமதியின் 6 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனா்.

இதுகுறித்து பானுமதி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.