கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்திய தொழிலாளா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிலாளா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய தொழிலாளா் கட்சியினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 7:45 pm

Syndication

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிலாளா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் சு. சந்திரசேகா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் ச. அருண்குமாா், சு. சின்னசாமி, துணைப் பொதுச்செயலா் சி. சசிகுமாா், ஆகியோா் முன்னிலை வகித்தனா். அக் கட்சியின் மாநிலத் தலைவா் பி.ஆா். ஈஸ்வரன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

மலைக்குறவா் ஜாதி மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு 5 மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால வெள்ள நிவாரண நிதி வழங்கிட வேண்டும். கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் உடனடியாக கடன் வழங்க வேண்டும். பணியிட விபத்து நிதி உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இதில், கட்சி நிா்வாகிகள் வீ. கோவிந்தராஜ், அன்னலட்சுமி, ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்: மாவட்ட ஆட்சியரகம் எதிரே 3 + 1 ஆட்டோ, அனைத்து வகையான வாகன ஓட்டுநா்கள் மற்றும் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நகராட்சி வளாகத்தில் கடைகள் கட்டும் பணியை கைவிட வேண்டும் எனும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு ஆட்டோ சங்கத்தினா் பலா் பங்கேற்றனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் கோரிக்கை மனுவை அளித்து கலைந்துசென்றனா்.