சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 46 பேருக்கு வயிற்றுப்போக்கு

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 28 பெண்கள் உள்பட 46 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 7:21 pm

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 28 பெண்கள் உள்பட 46 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கடம்பூா் கிராமத்தில் செல்வம்- பிரசாந்த் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு தனியாா் உணவகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட சைவ உணவு வகைகள் பறிமாறப்பட்டது. இந்நிலையில், உணவு உட்கொண்ட 9 குழந்தைகள், 28 பெண்கள் உள்பட 46 பேருக்கு புதன்கிழமை காலை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட அனைவரும் கிருஷ்ணாபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னா், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து, அரும்பாவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.