பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

புதுகையில் முத்தரையர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் காவேரி நகரில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2015, 8:23 pm

தினமணி

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் காவேரி நகரில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறையைச் சோóந்த பேராசிரியர் அ. சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் இரா. கருப்பையா ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுக்கோட்டை அருகே காவேரி நகர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட போது சாலையோரம் கிடந்த இக்கல்வெட்டைப் பார்த்தோம். சுமார் மூன்றடி உயரம் உடைய இக்கல்லில் மீநவந் முத்தரையர் ஊர் (ந)டுங்குடி இர(ண்)டு கரை நாட்டு மறமாணிக்கா பெ(ரு)ந் மாணிக்க நல்லூர் என்ற வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இது ஒரு எல்லைக்கல் போன்று தோற்றமளிக்கிறது.

பொன்மாணிக்கநல்லூர் என்ற ஊரில் இரண்டு கரை நாட்டு மறமாணிக்கார் தீர்மானித்தபடி நடப்பட்ட எல்லைக்கல் என்று பொருள் கொள்ளலாம். தற்போது காவேரி நகர் என்று அழைக்கப்படும் ஊரின் ஒரு பகுதி கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் நெடுங்குடி என்றும் மற்றொரு பகுதி பொன்மாணிக்கநல்லூர் என்றும் அழைக்கப்பட்டிருந்தது எனக் கருதலாம்.

இவ்விரு ஊர்களின் எல்லையாக இக்கல் நடப்பட்டிருக்கக்கூடும். மேலும் மீனவன் முத்தரையன் பற்றிய முதல் கல்வெட்டாக இது உள்ளது. பாண்டியர், முத்தரையர் தொடர்பைக் காட்டுவதாக கல்வெட்டில் வரும் பெயர் உள்ளது.

நார்த்தாமலைக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளவாறு, பல்லவ மன்னன் நிருபதுங்கனின் (கி.பி. 859-899) சமகாலத்தவனான சாத்தன் பழியிழியின் மகள் பழியிழி சிறியநங்கையைத் திருமணம் செய்து கொண்ட மீனவன் தமிழ்தியரையன் என்ற முத்தரையனின் வழி வந்தவனாக

இந்த மீனவன் முத்தரையன் இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.