புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மங்கனூர் ஊராட்சியில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மற்றும் தேர்பவனி விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த 17 ஆம் தேதி கோடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா பங்குதந்தைகளின் சிறப்பு திருப்பலி, செவ்வாய்கிழமை இரவு பக்தர்களின் வேண்டுதல் திருப்பலி பிராத்தனை நடைபெற்றது.
அதிகாலையில் சப்பரத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டும், மின்விளக்கு அலங்காரத்துடன் புனித செபஸ்தியர் பவனி ஊர்வலம் வீதி உலா வந்தது.
அதனைத்தொடர்ந்து தேரடி திருப்பலியுடன் திருவிழா நிறைவுற்றது.
திருவிழாவை முன்னிட்டு சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.