கந்தர்வகோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு மாணவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கந்தர்வகோட்டை அருகே பெருங்களூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிளஸ் 1 படிக்கும் பெருங்களூரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜாவுக்கும், அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் முருகேசன் மகன் கிருஷ்ணமூர்த்திக்கிடையே தகராறு ஏற்பட்டதில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கிருஷ்ணமூர்த்தி சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் தந்தை முருகேசன் ஆதனக்கோட்டை போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜாவைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

90’ஸ் விஜய்!

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


