கந்தர்வகோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு மாணவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கந்தர்வகோட்டை அருகே பெருங்களூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிளஸ் 1 படிக்கும் பெருங்களூரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜாவுக்கும், அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் முருகேசன் மகன் கிருஷ்ணமூர்த்திக்கிடையே தகராறு ஏற்பட்டதில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கிருஷ்ணமூர்த்தி சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் தந்தை முருகேசன் ஆதனக்கோட்டை போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜாவைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


