முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

கந்தர்வகோட்டை அருகே ஆடுகளை கொன்ற மர்ம நபர்களுக்கு வலை

கந்தர்வகோட்டை அருகே விவசாயிக்கு சொந்தமான 2 ஆடுகள் வெட்டிக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

Updated On :23 ஜூலை 2018, 8:57 am IST

கந்தர்வகோட்டை அருகே விவசாயிக்கு சொந்தமான 2 ஆடுகள் வெட்டிக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் இளங்கோவன்(55). விவசாயியான இவர் இருபது ஆடுகளை வளர்த்து வந்தார். வழக்கம் போல சனிக்கிழமை இரவு ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள பட்டியில் அடைத்து வைத்து விட்டு  வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று விட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இளங்கோவனுக்குச் சொந்தமான இரண்டு ஆடுகள் வெட்டப்பட்டு இறந்து கிடந்தது. மற்ற ஆடுகள் அப்பகுதியில் நின்றிருந்தன.  இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸில் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், ஆடுகளை கொன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.