பொன்னமராவதியில் நூல் வெளியீட்டு விழா

பொன்னமராவதியில் கண்ணெதிரே போதிமரங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

பொன்னமராவதியில் கண்ணெதிரே போதிமரங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவிற்கு மதுரை லயோலா தொழிற்பயிற்சி நிறுவன தலைவர் அருள்தந்தை மரியசிங்கராயர் தலைமை வகித்தார். விழாவில், அமல அன்னை மெட்ரிக். பள்ளியின் ஆசிரியர் ஜோ. சலோவின் 27 ஆவது நூலாகிய கண்ணெதிரே போதிமரங்கள் எனும் நூலினை முத்தமிழ்ப் பாசறை அறங்காவலர் குழு தலைவர் மருத்துவர் மு. சின்னப்பா வெளியிட திருமயம் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம் பெற்றுக்கொண்டார். அமல அன்னை மெட்ரிக். பள்ளியின் முதல்வர் ச.ம. மரியபுஷ்பம், மதிமுக சிவகங்கை மாவட்டச் செயலர் செ.செவந்தியப்பன், தொட்டியம்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் ச. சோலைப்பன், கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெ.மாரிமுத்து, வைகறை பதிப்பக இயக்குநர் அ.ஸ்டீபன், வெற்றிமொழி நூல் வெளியீட்டக உரிமையாளர் இரா.தமிழ்தாசன் ஆகியோர் பேசினர். றமுத்தமிழ்ப்பாசறை அறங்காவலர் நெ.ராமச்சந்திரன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். நூலாசிரியர் ஜோ.சலோ ஏற்புரையாற்றினார். ஆசிரியை மெர்சி டயானா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com