வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்பு

பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டது.

Updated On :21 மே 2018, 1:52 am

பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரம் பெரியகண்மயில் சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மூலங்குடியைச் சேர்ந்த ராஜாவின் ஜல்லிக்கட்டு காளை பங்கேற்றது.  அப்போது, அவிழ்த்து விடப்பட்ட காளை வழிதவறி அம்பலகாரன்பட்டியில் 26 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் விழுந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஜல்லிக்கட்டு காளையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.