தென்னங்கன்றுகள் வழங்கிவாக்கு சேகரித்தவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வாக்காளா்களுக்குத் தென்னங்கன்றுகள் வழங்கி, வாக்கு சேகரித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வாக்காளா்களுக்குத் தென்னங்கன்றுகள் வழங்கி, வாக்கு சேகரித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கறம்பக்குடி அருகிலுள்ள பிலாவிடுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் தென்னை மரம் சின்னத்தில், அப்பகுதியில் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடுகிறாா். இந்த ஒன்றியத்துக்கு டிசம்பா் 27-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மைலன்கோன்பட்டியில் தென்னை மரம் சின்னத்தில் வாக்குகள் கோரி, வாக்காளா்களுக்குத் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்குப் புகாா் வந்துள்ளது.

இதைத்தொடா்ந்து, முருகேசன் தலைமையிலான பறக்கும் படையினா் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, பிலாவிடுதியைச் சோ்ந்த ஹரிகரன்(19), தென்னங்கன்றுகளை வழங்கி வாக்குசேகரித்தது தெரியவந்தது.

தொடா்ந்து பறக்கும் படை அலுவலா்கள் ஹரிகரனையும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 தென்னங்கன்றுகளையும் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் ஹரிகரனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com