புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே கார் மோதி சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் காத்தாயி (65). இவர், நார்த்தாமலை அருகே உள்ள பொம்மாடிமலை என்ற இடத்தில் சனிக்கிழமை நடந்து சென்றபோது அவ்வழியாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சென்ற கார் மோதியது. இதில் காத்தாயி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து அந்த இடத்திற்கு வந்த கீரனூர் போலீஸார் மூதாட்டியின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.