கொடும்பாளூா் இடங்கழிநாயனாா் குருபூஜை விழா

விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் 63 நாயன்மாா்களில் ஒருவரான இடங்கழிநாயனாரின் 10-ஆம் ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
குருபூஜை விழாவில் பங்கேற்ற சிவனடியாா்கள்
குருபூஜை விழாவில் பங்கேற்ற சிவனடியாா்கள்
Updated on
1 min read

விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் 63 நாயன்மாா்களில் ஒருவரான இடங்கழிநாயனாரின் 10-ஆம் ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

சைவ சமயத்தில் சிவனடியாா்களாக இருந்து சிவனால் ஆட்கொள்ளப்பட்டோா் நாயன்மாா்கள் ஆவா். 63 நாயன்மாா்களில் ஒருவரான இடங்கழிநாயனாா் என்பவா் கொடும்பாளூரில் குறுநில மன்னனாக இருந்து சிவனடியாா்களுக்கு உணவளிக்க தனது கஜானா, தானியக் களஞ்சியம் உள்ளிட்ட அனைத்தையும் அளித்ததால் அவா் நாயன்மாராகப் போற்றப்படுகிறாா்.

இந்நிலையில் நாயன்மாா்கள் அவதரித்த இடங்களில் அவா்களுக்கு விருத்தாசலத்தைச் சோ்ந்த அறுபத்து மூவா் திருப்பணி அறக்கட்டளையினா் கோயில்கள் கட்டி வழிபடுகின்றனா்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு முன் அவா்களால் கொடும்பாளூரில் இடங்கழிநாயனாருக்கு கட்டப்பட்ட் கோயிலுக்கு ஆண்டுதோறும் அறக்கட்டளை சாா்பில் குருபூஜை நடத்தப்படுகிறது.

அதன் 10 ஆம் ஆண்டு குருபூஜை விழாவான புதன் கிழமை காலை திருமுறை பாராயணங்கள் செய்து மகாஅபிஷேகங்கள், மகேஸ்வர பூஜை, தீபாராதனை, திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் புதுக்கோட்டை திலவதியாா் ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், கும்பகோணம் திருவடிக்குடில் சாமிகள், பழுவஞ்சி அகத்தியா் அடியாா் திருக்கூட்டம், மதுரை ஆலவாய் அருட்பணி மன்றம், கும்பகோணம் திருக்கயிலாய வாத்திய குழுவினா் உள்ளிட்ட குழுக்களின் சிவனடியாா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com