இலுப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலாம சபை சார்பில் பட்டிமன்றம்

அன்னவாசலில், இலுப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலாம சபை சார்பில் பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அன்னவாசலில், இலுப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலாம சபை சார்பில் பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த பட்டிமன்றத்திற்கு ஜமாத் தலைவர் முகமது யூனூஸ் தலைமை வகித்தார். இதில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் பெற்றோர்களா ? ஆசிரியர்களா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  
இதற்கு நடுவராக விருதுநகர் அரபிகல்லூரி பேராசிரியர் ஷாஜஹான் செயல்பட்டார். முடிவில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் ஆசிரியர்களே என தீர்ப்பளித்தார்.
இதில் அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் மற்றும் திரளான இஸ்லாமிய ர்கள் கலந்து கொண்டனர்.  
முன்னதாக தலைமை இமாம் அப்துல்கரீம் வரவேற்றார். முகமது தாரிக் பைஜி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com