திருப்புனவாசல் ஏரி,  நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தல்

திருப்புனவாசல் ஏரி, நீர்வரத்து வாய்க்காலைகளைத் தூர்வார வேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

திருப்புனவாசல் ஏரி, நீர்வரத்து வாய்க்காலைகளைத் தூர்வார வேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் சார்பில் திருப்புனவாசலில் அண்மையில் நடைபெற்ற கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 
திருப்புனவாசல்  ஊராட்சி முழுவதும் தட்டுப்பாடின்றி சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அரசு வழங்கும் ஊதியத்தை குறைக்காமல் வழங்க வேண்டும். திருப்புனவாசல் ஏரி, நீர்வரத்து வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்குகு கிளைச் செயலர் செ.ஜான் தலைமை வகித்தார். நிர்வாகிகள்  த.ராஜேந்திரன், பி.சவரிமுத்து  முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலர் மு.மாதவன் தீர்மானங்களை பெற்றுக் கொண்டு விளக்கவுரையாற்றினார்.  மாநிலக் குழு உறுப்பினர்கள்  ஏ.எல்.ராஜூ, சுந்தர்ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள்  ஆ.ராஜேந்திரன், கே.ராஜேந்திரன்,  மாவட்டத் துணைச் செயலர் அ.கணேசன்,   ஆவுடையார்கோவில்  ஒன்றியச்  செயலர் எஸ்.ஜெபமாலை பிச்சை உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com