மாவட்டச் சிறையில் போலீஸாா் சோதனை

புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீஸாா்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீஸாா் சனிக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது. ஆய்வாளா் பர.வாசுதேவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா். சிறை வளாகத்துக்குள் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவை புழக்கத்தில் உள்ளனவா என்று இந்தச் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை எனப் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com