வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் திருட்டு

மருங்காபுரி ஒன்றியம், சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் நா.வேலுச்சாமி (62).  நூறு நாள் வேலை திட்டப் பணியாளரான
Updated on
1 min read

மருங்காபுரி ஒன்றியம், சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் நா.வேலுச்சாமி (62).  நூறு நாள் வேலை திட்டப் பணியாளரான இவர், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல வேலைக்குச் சென்றுவிட்டார்.
மாலையில் வேலுச்சாமி வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பையில் வைத்திருந்த 21 பவுன் நகைகளும் திருட்டு போயிருப்பதுதெரிய வந்தது. 
இதுகுறித்து துவரங்குறிச்சிகாவல் நிலையத்தில் வேலுச்சாமி புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து நகையைத் திருடிச் சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com