கோயில்களில் பங்குனி உத்திரம்
By DIN | Published On : 22nd March 2019 08:44 AM | Last Updated : 22nd March 2019 08:44 AM | அ+அ அ- |

பங்குனி உத்திரத்தையொட்டி புதுக்கோட்டை அருகேயுள்ள குமரமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை ஆயுதப்படை திடல் அருகேயுள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய காவல் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதேபோல , மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலும் பங்குனி உத்திர விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...