புதுகையில் குழந்தைகள் பாதுகாப்புப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மாவட்ட
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் மருத்துவத் துறையில் பணியாற்றும் செவிலியர்கள் 
மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகமயமாதலால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளின் பணிகள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகள், குழந்தைகள் உரிமை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியாளர்கள் அசோக்குமார், சார்லஸ் வில்லியம்ஸ், ஜோதிராஜ், நிர்மல்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆ. இளையராஜா செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com