குடுமியான்மலை கல்லூரியில் ஏப். 5இல் திறந்தவெளி நாள்
By DIN | Published On : 28th March 2019 07:46 AM | Last Updated : 28th March 2019 07:46 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின்வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வரும் ஏப். 5 வெள்ளிக்கிழமை வேளாண் பட்டப்படிப்புகளுக்கான திறந்தவெளி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்களிடையே வேளாண் பட்டப்படிப்புகள் மீது ஆர்வம் கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் நேரில் வந்து கல்லூரியைப் பார்வையிட்டு, குறிப்பாக ஆய்வகங்களைப் பார்வையிட்டு, வேளாண் படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் இரா. நளினி (7902-02748), உதவிப் பேராசிரியை ப. ராதா (97860-00399) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை கல்லூரியின் முதல்வர் கே. சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...