போதிய மழை வேண்டும், ஆறு, குளங்கள் நிரம்பி விவசாயம் செழித்து பசிப்பிணி நீங்கி மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டி 48-ஆம் ஆண்டாக பழனி கோயிலுக்கு பாதயாத்திரையாக 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் சிலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரைக் குழுத் தலைவர் சிவராமன் தலைமையிலும் செயலர் சூரியதாஸ் முன்னிலையிலும் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். இவர்கள் செல்லும் வழியெங்கும் தாங்கள் கொண்டு செல்லும் சமையல் பொருள்களைக் கொண்டு உணவு சமைத்து சாப்பிடுவதோடு, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் உணவு அளித்துச் செல்கின்றனர்.