சாலைப் பராமரிப்பை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு

சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2-4-pdk17nedunj_1711chn_12
2-4-pdk17nedunj_1711chn_12

சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஏழாவது கோட்டப் பேரவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் டி. முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் குமாா் வரவு- செலவு அறிக்கை வாசித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத்  தலைவா் ஜபருல்லா மாவட்டச் செயலா் ஆா். ரங்கசாமி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயலா் மகேந்திரன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

அறந்தாங்கி ஆவுடையாா்கோயில் கோட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளா்களின் ஆண்டு ஊதிய உயா்வு ஜனவரி மாதத்தில் வழங்க வேண்டும். புதுக்கோட்டை கோட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளா்களுக்கு தளவாட சாமான்கள் மற்றும் காலணிகள் வழங்க வேண்டும். 

சாலைப் பணியாளா்களுக்கு சுற்றுலா செல்ல பயணப்படி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு தர ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்குவதைக் கைவிட வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்துபோன சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் துணைத் தலைவா் கருப்பையா வரவேற்றாா். முடிவில் மாவட்ட இணைச் செயலா் எஸ். ஐயப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com