பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலத்தானியம் ஆற்றுப்பகுதியில் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து காரையூா் காவல் உதவி ஆய்வாளா் துரைசிங்கம் மற்றும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது 1 யூனிட் மணலை அனுமதியின்றி ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.