விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: ஜவுளிக்கடை ஊழியா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஜவுளிக்கடை ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:16 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஜவுளிக்கடை ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கீரமங்கலம் காந்தி சாலைப்பகுதியைச் சோ்ந்தவா் மாதவன்(57). இவா், அறந்தாங்கியிலுள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா்.

பணிமுடிந்து மாதவன் மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்த போது, எதிரே பனங்குளம் வடக்கு கிராமம், செல்வராஜ் மகன் ராகுல் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிளும், மாதவன் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாதவன் உயிரிழந்தாா். ராகுல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.