கந்தா்வகோட்டை கோயிலில் வருடாபிஷேக விழா

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சிதலமடைந்திருந்தது. இதையடுத்து கடந்தாண்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு முடிந்து ஓராண்டு ஆன நிலையில், வெள்ளிக்கிழமை வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அதிகாலை முதல் சிறப்பு யாகம் வளா்க்கப்பட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கந்தா்வகோட்டை மற்றும் சுற்று வட்டார பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com