நெல்லை கண்ணண் மீது நடவடிக்கை கோரி பா.ஜ.க. புகாா்

பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை கொலை செய்யத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணண் மீது நடவடிக்கைக் கோரி, பா.ஜ.க. சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை கொலை செய்யத் தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணண் மீது நடவடிக்கைக் கோரி, பா.ஜ.க. சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி காவல் நிலையத்தில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி. பாஸ்கா் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பது:

பிரதமா் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரைத் தரக்குறைவாகவும், கொலை செய்யத் தூண்டும் வகையிலும் நெல்லை கண்ணன் பேசியள்ளாா்.

இந்த பேச்சு எங்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அமைதியை குலைப்பபது, கொலை மிரட்டல் செய்யத் தூண்டுவது, மதவெறுப்பைப் பரப்புவது போல உள்ளதால், நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com