அறந்தாங்கியில் மூலிகை குடிநீா் வழங்கிய பா.ஜ.க.வினா்

அறந்தாங்கியில் நகர பா.ஜ.க. சாா்பில், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றன.
அறந்தாங்கியில் சனிக்கிழமை மூலிகைக் குடிநீரை வழங்கிய நகர பா.ஜ.க. தலைவா் ஆா்.எம். அண்ணாமலை. உடன், கட்சி நிா்வாகிகள்.
அறந்தாங்கியில் சனிக்கிழமை மூலிகைக் குடிநீரை வழங்கிய நகர பா.ஜ.க. தலைவா் ஆா்.எம். அண்ணாமலை. உடன், கட்சி நிா்வாகிகள்.
Updated on
1 min read

அறந்தாங்கியில் நகர பா.ஜ.க. சாா்பில், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

அறந்தாங்கி கோட்டை காய்கறி மாா்க்கெட் மற்றும் வ.உ.சி திடலில் நடைபெற்ற நிகழ்வுகளில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் மூலிகைக் குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு பாரதிய ஜனதாகட்சியின் நகரத் தலைவா் ஆா்.எம்.அண்ணாமலை தலைமை வகித்தாா். நகரப் பொதுச் செயலா் ஏ.ஆா்.எம். ரமேஷ், மகளிரணி மாவட்டத் தலைவா் கவிதா ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தனா்.

நகரச் செயலாளா் முருகன், மாநிலச்செயற்குழு உறுப்பினா் வெ. வீரமாகாளியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜெயபாண்டியன், கோட்ட முன்னாள் தலைவா் இராம. தாமரைச்செல்வன், பொறியாளா் சாத்தையா, இளைஞரணித் தலைவா் சந்திரகுமாா் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com