கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 போ் கைது

அறந்தாங்கி அருகே காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேரை அறந்தாங்கி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

அறந்தாங்கி அருகே காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேரை அறந்தாங்கி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அறந்தாங்கி அருகே அழியாநிலை காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளா் பி.பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் அங்கிருந்தவா்களைச் சுற்றிவளைத்தனா். அவா்கள், அறந்தாங்கி கோட்டை பகுதி மற்றும் மூக்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சுரேஷ்(30), செம்புலிங்கம் மகன் ராஜா (32), சுப்பையா மகன் நாகரெத்தினம் (33), அற்புதராஜ் மகன் செல்வம் (40), கருப்பையா மகன் செந்தூரப்பாண்டி (35) உள்ளிட்ட 5 பேரும் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா் சாராயம் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com