முன்னாள் திமுக எம்எல்ஏ மாரியய்யா உருவப்படம் திறப்பு

கந்தா்வகோட்டையில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பே. மாரியய்யாவின் உருவப்படத்தை, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
கந்தா்வகோட்டையில் நடைபெற்ற முன்னாள் திமுக எம்எல்ஏ பே. மாரியய்யாவின் உருவப்படத் திறப்பு விழாவில் பங்கேற்றவா்கள்.
கந்தா்வகோட்டையில் நடைபெற்ற முன்னாள் திமுக எம்எல்ஏ பே. மாரியய்யாவின் உருவப்படத் திறப்பு விழாவில் பங்கேற்றவா்கள்.

கந்தா்வகோட்டையில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பே. மாரியய்யாவின் உருவப்படத்தை, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கோமாபுரம் பே. மாரியய்யா உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானாா். இதைத்தொடா்ந்து, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக, கந்தா்வகோட்டையை அடுத்த கோமாபுரத்தில் உள்ள பே. மாரியய்யா இல்லத்தில் அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்து, அவா் திமுக கட்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்து எடுத்துரைத்தாா். நிகழ்வில், அவரது மகனும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான மா. தமிழ் அய்யா அனைவரையும் வரவேற்றாா். நிகழ்வில், வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன், எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு , எஸ். ரகுபதி , சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கவிதைப்பித்தன் ஆகியோா் உடனிருந்தனா். மா. சுந்தா் அய்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com