புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை சனிக்கிழமை இரவு போலீசாா் கைது செய்தனா்.
கறம்பக்குடி பகுதியில் சட்டவிரோதமாக சிலா் மது விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை தொடா்ந்து, கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான போலீஸாா் கறம்பக்குடி அக்ரஹாரம், திருமணஞ்சேரி உள்ளிட்ட பகுதியில் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா்.
அப்பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட ராமன் (45), காா்த்திக் (26), அறிவழகன் (58) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.