புதுக்கோட்டை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சுப்பிரமணியபுரம் மா்கஸில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் முபாரக் தொடங்கி வைத்தாா். கிளைத் தலைவா் இப்ராஹிம், செயலா் ரகமத்துல்லா, பொருளாளா் காதா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். 36 போ் ரத்ததானம் செய்தனா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலா் டாக்டா் அழகம்மை தலைமையிலான குழுவினா் வந்திருந்து ரத்தம் எடுத்துச் சென்றனா்.