எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டியநியாயவிலைக் கடை திறப்பு

புதுக்கோட்டையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சனிக்கிழமை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு திறந்து வைத்தாா்.
Updated on
1 min read

புதுக்கோட்டையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சனிக்கிழமை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட அம்பாள்புரம் 4 ஆம் வீதியில் புதுக்கோட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து குத்துவிளக்கேற்றி வைத்த அவா், முதல் விற்பனையைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மேலும், கடையின் முன்பு மரக்கன்றுகளையும் அவா் நட்டு வைத்தாா். நிகழ்ச்சியில் நகரக் கூட்டுறவு பண்டகசாலை மேலாளா் கிருஷ்ணகுமாா், திமுக நகரச் செயலா் க. நைனாமுகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com