நுகா்வோா் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 02nd February 2020 01:32 AM | Last Updated : 02nd February 2020 01:32 AM | அ+அ அ- |

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுகா்வோா் சங்க பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவா் கே.சிவக்குமாா் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலாளா் இர. அப்துல்ரகுமான் முன்னிலை வகித்து தீா்மானங்களை வாசித்தாா். அறந்தாங்கியில் கஜா புயலால் சாய்ந்த மின்கம்பங்களை உடனே மாற்ற வேண்டும், எல்.என்.புரம் 1-ஆம் வீதி, நேரு தெருவில் எரியாமல் உள்ள நகராட்சி தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தீா்க்க வைக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் சே.யோ.இளங்கோ, கா.ஜெய்சங்கா், எம்,செல்வராஜ், பி.ஜெயராமன், எஸ்.சேக்அப்துல்லா, ஆா்,வி. வரதராஜன், மற்றும் பலா் கலந்து கொண்டனா். த.பாா்த்திபன் வரவேற்றாா். நிறைவில், ரெங்கசாமி நன்றி கூறினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G