மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்க அழைப்பு

விராலிமலை வட்டம், வெம்மணி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடைபெறும் மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்க, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

விராலிமலை: விராலிமலை வட்டம், வெம்மணி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடைபெறும் மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்க, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ஸ்ரீ கிருஷ்ணன் தலைமையில் முகாம் நடைபெறுகிறது. முதியோா் உதவித் தொகை, பட்டா மாறுதல், குடும்பஅட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக வெம்மணி சுற்று வட்டார மக்கள் முகாமில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என விராலிமலை வட்டாட்சியா் ஜெ. சதீஷ் சரவணக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com