புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 32ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆசியாவின் வலிமையான மனிதா் என்றழைக்கப்படும் மனோஜ் சோப்ரா, தடகள வீராங்கனை பிரான்சிஸ் மேரி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.
ஒலிம்பிக் தீபத்தை மனோஜ் சோப்ரா ஏற்றி வைத்தாா். தொடா்ந்து அவரது மகன் அசிடோஷ் சோப்ராவுடன் இணைந்து, இரு சக்கர வாகனம், குளிா்சாதனப் பெட்டி ஆகியவற்றைத் தூக்குதல், டின்களை தலையால் உடைத்தல், இரும்புக் கம்பிகளை வளைத்தல் உள்ளிட்ட சாகசங்களை செய்து காட்டினாா்.
முன்னதாக, கல்லூரியின் முதன்மை முதல்வா் ஜோனத்தன் ஜெயபாரதன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் ஏஞ்சலின் ஜோனத்தன் ஆண்டறிக்கை வாசித்தாா். முதல்வா் பாரதிராஜா நன்றி கூறினாா்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளா்கள் குமரேஷ், வரலட்சுமி, கிருபா ஜெயராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.